தீமிதித் திருவிழா : பக்திப் பரவசத்தில் பக்தர்கள்
தீமிதித் திருவிழா இன்னும் சில மணி நேரத்தில் நடைபெறவிருக்கிறது.
தீமிதித் திருவிழா இன்னும் சில மணி நேரத்தில் நடைபெறவிருக்கிறது.
அது தொடர்பான நிகழ்ச்சிகளும், அதற்கான ஆயத்தப் பணிகளும் நடந்து வருகின்றன.
இந்த ஆண்டு சுமார் 4100 ஆண் பக்தர்கள் இதுவரை தீமிதித் திருவிழாவுக்குப் பதிவு செய்ததாக இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது.
தீமிதி முடிந்தபிறகு, சுமார் 570 பெண் பக்தர்கள் பூக்குழியைச் சுற்றிவரப் பதிவு செய்து கொண்டுள்ளனர்.
காலை 10 மணியில் இருந்தே தீமிதிக்குப் பூக்குழி தயாராகிவருகிறது.
பூக்குழிக்காக இந்த ஆண்டு கிட்டத்தட்ட 25,000 மரக்கட்டைகள் தருவிக்கப்பட்டன.
கடந்த ஆண்டு 22,000 மரக்கட்டைகள் பயன்படுத்தப்பட்டன.
தீமிதித் திருவிழாவை நேரலையாக www.heb.org.sg/events/firewalkingfestival2019/ என்ற இணைய வாசலிலும் பார்க்கலாம்.