தீமிதித் திருவிழா: காலையிலிருந்து திரண்ட வண்ணம் இருக்கும் பக்தர்கள்
சவுத்பிரிட்ஜ் ரோட் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் இன்று பின்னேரம் நடைபெறவுள்ள தீமிதித் திருவிழாவுக்குக் காலையிலிருந்து பக்தர்கள் திரண்ட வண்ணம் உள்ளனர்.
சவுத்பிரிட்ஜ் ரோட் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் இன்று பின்னேரம் நடைபெறவுள்ள தீமிதித் திருவிழாவுக்குக் காலையிலிருந்து பக்தர்கள் திரண்ட வண்ணம் உள்ளனர்.
தற்போது பக்தர்கள் தங்கள் 'wristbands' எனும் அடையாளக் காப்புகளைப் பெற்றுக்கொள்கின்றனர். பக்தர்களின் பாதுகாப்புக் கருதி அடையாளக் காப்புகள் கொடுக்கப்படுகின்றன.
இவ்வாண்டு சுமார் 4,000 ஆண் பக்தர்கள் பூக்குழியில் இறங்குவர் என்று மாரியம்மன் கோயில் நிர்வாகக் குழுச் செயலாளர் திரு. கதிரேசன் தெரிவித்தார்.
இரவு 8 மணிவாக்கில் அவர் பூக்குழியில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.