Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஹெண்டர்சன் ரோட்டில் வாகனங்களிலிருந்து திருடியதாக நம்பப்படும் நபரை அதிவேகத்தில் பிடித்த காவல்துறை

நிறுத்தப்பட்ட வாகனங்களிலிருந்து திருடியதாக நம்பப்படும் 49 வயது ஆடவரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். 

வாசிப்புநேரம் -

நிறுத்தப்பட்ட வாகனங்களிலிருந்து திருடியதாக நம்பப்படும் 49 வயது ஆடவரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

நேற்று, ஹெண்டர்சன் ரோட்டில் பல வாகனங்களில் இருந்த ரொக்க அட்டைகள் திருடப்பட்டதாகக் காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டது.

விசாரணையின் மூலமாகவும், கண்காணிப்புக் கேமராக்களின் உதவியோடும் கிளமெண்டி காவல்துறைப் பிரிவு அதிகாரிகள் சந்தேக நபரை அடையாளம் கண்டு 16 மணிநேரத்திற்குள் கைதுசெய்தனர்.

சந்தேக நபர் வேறு சில திருட்டுச் சம்பவங்களிலும் சம்பந்தப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

திருட்டுக் குற்றத்திற்கு
3 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ, அபராதமோ, இரண்டுமோ விதிக்கப்படலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்