Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

‘டாக்டர் தம் பிங் ஜின் விசாரணையை எதிர்பார்த்திருக்க வேண்டும்’-திரு. சார்ல்ஸ் சோங்

இணையத்தில் வேண்டுமென்றே பொய்யான தகவல்கள் பரப்பப்படும் பிரச்சினையை ஆராயும் தெரிவுக்குழுவின் தலைவர் சார்ல்ஸ் சோங், வரலாற்று நிபுணர் தம் பிங் ஜின்னுக்கு ஆதரவாக எழுதப்பட்ட பொதுக் கடிதத்திற்குப் பதில் அளித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
‘டாக்டர் தம் பிங் ஜின் விசாரணையை எதிர்பார்த்திருக்க வேண்டும்’-திரு. சார்ல்ஸ் சோங்

படம்: Channel NewsAsia

இணையத்தில் வேண்டுமென்றே பொய்யான தகவல்கள் பரப்பப்படும் பிரச்சினையை ஆராயும் தெரிவுக்குழுவின் தலைவர் சார்ல்ஸ் சோங், வரலாற்று நிபுணர் தம் பிங் ஜின்னுக்கு ஆதரவாக எழுதப்பட்ட பொதுக் கடிதத்திற்குப் பதில் அளித்துள்ளார்.

தெரிவுக்குழுவின் விசாரணையின்போது, சட்ட அமைச்சர் கா.சண்முகம், டாக்டர் தம்மிடம் கேள்வி கேட்ட விதம் குறித்து அந்தப் பொதுக் கடிதம் ஆட்சேபம் தெரிவித்தது.

டாக்டர் தம்மிற்குக் கருத்து தெரிவிக்கும் உரிமை உண்டு. ஆனால், சிங்கப்பூரில் பொய்யான தகவல்களுக்கான முக்கிய ஆதாரமாக அரசாங்கமே திகழ்வதாக அவர் குறை கூறியிருந்தார்.

அதுகுறித்த விசாரணையை அவர் கட்டாயம் எதிர்பார்த்திருக்கவேண்டும் என்று பொதுக் கடிதத்திற்குப் பதில் அளித்த திரு.சோங் குறிப்பிட்டார்.

தெரிவுக்குழுவின் முன்னிலையில் நேரடி சாட்சியம் அளிக்க உடன்படுவதாக டாக்டர் தம் எழுத்துமூலம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

அந்த அடிப்படையில், டாக்டர் தம் முன்னறிவிப்பின்றி விசாரிக்கப்பட்டதாகப் பொதுக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டது ஆச்சரியமளிப்பதாகத் திரு.சோங் சொன்னார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்