COVID-19: சிங்கப்பூரில் மேலும் 73 பேருக்குக் கிருமித்தொற்று; 18 பேருடன் Fengshan PCF Sparkletots புதிய குழுமம்
சிங்கப்பூரில் மேலும் 73 பேருக்குக் கிருமி தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 631ஆகப் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூரில் மேலும் 73 பேருக்குக் கிருமி தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 631ஆகப் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூரில் ஒரே நாளில் ஆக அதிகமான சம்பவங்கள் பதிவானது இன்று தான்.
புதிதாகக் கிருமித்தொற்றுள்ள இடமாக ஃபெங்சானில் உள்ள PCF Sparkletots நிலையம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அங்கு 18 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இன்று பாதிக்கப்பட்டவர்களில் 38 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்.
அவர்கள் ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியான் நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.
இன்று 5 பேர் உடல்நலம் தேறி வீடு திரும்பினர். குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 160ஆக உள்ளது.