Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சமூக மன்றக் கழிப்பறையில் பெண்ணைக் காணொளி எடுத்த இளையர்

சமூக மன்றக் கழிப்பறையில் பெண் ஒருவரைக் காணொளி எடுத்ததாக 16 வயது இளையர் ஒப்புக்கொண்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
சமூக மன்றக் கழிப்பறையில் பெண்ணைக் காணொளி எடுத்த இளையர்

(படம்: Google Street View)

சமூக மன்றக் கழிப்பறையில் பெண் ஒருவரைக் காணொளி எடுத்ததாக 16 வயது இளையர் ஒப்புக்கொண்டுள்ளார்.
முகமது நூர் ஹைகல் ஷஸாலி என்னும் அந்த இளையர் மீது பெண்ணின் மானத்தை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் செங்காங்கில் உள்ள Anchorvale சமூகமன்றத்தில் இரவு நேரத்தில் அந்தச் சம்பவம் நடந்தது.

இளையர், 20 வயதுப் பெண் கழிப்பறையில் இருந்தபோது படம் எடுத்துள்ளார்.

அதன் பிறகு அந்த இளையர் மீது காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை தொடங்கியது.

இரண்டு மாதத்திற்கு முன்னர், அதே இளையர் ஒரு பேரங்காடியிலிருந்து மதுபான போத்தல் ஒன்றைத் திருடியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இளையரின் இரண்டு குற்றங்களுக்கும் அடுத்த மாதம் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்