பொதுக் கழிவறைகளின் சுகாதாரத் தரத்தை நிர்ணயிப்பதற்குப் புதிய விதிமுறைகள்
பொதுக் கழிவறைகளின் சுகாதாரத் தரத்தை நிர்ணயிப்பதற்குப் புதிய விதிமுறைகள் அடுத்த ஆண்டிலிருந்து அறிமுகம் செய்யப்படவுள்ளன.
பொதுக் கழிவறைகளின் சுகாதாரத் தரத்தை நிர்ணயிப்பதற்குப் புதிய விதிமுறைகள் அடுத்த ஆண்டிலிருந்து அறிமுகம் செய்யப்படவுள்ளன.
நான்கு நட்சத்திரத் தகுதியைப் பெற, நிறுவனங்கள் இனி அறிவார்ந்த தீர்வுகளில் ஒன்றையாவது கடைப்பிடிக்கவேண்டும்.
அடுத்த ஆண்டு ஏப்ரலிலிருந்து அது நடப்புக்கு வரும்.
பொதுக் கழிவறைகளில் கருத்துகளைத் தெரிவிப்பதற்குத் தொடுதிரைகளை வைத்தல், சுகாதாரத்தின் நிலையைக் கண்காணிப்பதற்குக் கருவிகளைப் பொருத்துதல், மின்சாரத்தை மிச்சப்படுத்தும் வழிமுறைகளைப் பின்பற்றுதல் போன்ற வழிமுறைகள் முன்வைக்கப்படுகின்றன.
தற்போது 1,300 பொதுக் கழிவறைகளுக்குச் சுகாதாரச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கு அவை குறைந்தது மூன்று நட்சத்திரமாவது பெற்றிருப்பது அவசியம்.