பாலியல் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடும் NUS மாணவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படலாம்
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் பாலியல் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படலாம்.
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் பாலியல் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படலாம்.
குறைந்தது ஓராண்டு தற்காலிக நீக்கத்திலிருந்து முழுமையான நீக்கம் வரை தண்டனை விதிக்கப்படக்கூடும்.
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் பாலியல் ஒழுங்கீன மறுஆய்வுக் குழு அதன் நடவடிக்கைகளை மறுஆய்வு செய்து புதிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
- பாலியல் ஒழுங்கீனக் குற்றச்சாட்டுகளுக்கு ஓராண்டிற்குத் தற்காலிக நீக்கம்
- கடுமையான குற்றங்களுக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து முழுமையான நீக்கம்
- நீக்கம் முடிந்து, பல்கலைக்கழகத்திற்குத் திரும்பும்முன், மருத்துவ நிபுணரிடமிருந்தோ ஆலோசகரிடமிருந்தோ மறுவாழ்வுச் சான்றிதழைக் குற்றம் செய்தவர் பெற்றிருக்கவேண்டும்.
- தேர்வு முடிவு ஆவணங்களில் தற்காலிக நீக்கம் குறித்த விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.