Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர்ப் பயணத்துறையின் மீட்சிக்கு மேலும் 68 மில்லியன் வெள்ளி நிதி

சிங்கப்பூரின் பயணத்துறைக்கு இன்னும் கூடுதல் ஆதரவு தர, அரசாங்கம் 68 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான நிதியை வழங்கவுள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்ப் பயணத்துறையின் மீட்சிக்கு மேலும் 68 மில்லியன் வெள்ளி நிதி

(படம்: REUTERS/Edgar Su)

சிங்கப்பூரின் பயணத்துறைக்கு இன்னும் கூடுதல் ஆதரவு தர, அரசாங்கம் 68 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான நிதியை வழங்கவுள்ளது.

பயணத்துறையில் பயிற்சிகள், வர்த்தக மேம்பாடு, மின்னிலக்கமயமாதல் ஆகியவற்றுக்கு அந்தத் தொகை உதவும்.

இன்னும் புத்தாக்கமிக்க பொருள்களையும் அனுபவங்களையும் ஊக்குவிக்க, அரசாங்கம், பயணத்துறை மேம்பாட்டு நிதிக்குக் கூடுதல் பணம் ஒதுக்கவுள்ளது.

அதனையும் சேர்த்து அந்த ஐந்தாண்டு ஆதரவுத் திட்டத்தின் மதிப்பு சுமார் 850 மில்லியன் வெள்ளியாகும்.

அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதி வரை பயணத்துறை நிறுவனங்கள், மேம்படுத்தப்பட்ட ஆதரவு மானியங்களைப் பெறலாம்.

Tcube எனும் புதிய தளத்தைக் கொண்டு நிறுவனங்கள் அவற்றின் மின்னிலக்கத் தீர்வுகளைச் சோதனை செய்யலாம்.

சிங்கப்பூர் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் திட்டத்தின் மூலமும், வர்த்தகங்கள் தங்களது வர்த்தக யோசனைகளைச் சோதிக்கலாம்.

அந்தத் திட்டம் 2023 செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

35 தொழில்துறைத் தீர்வுகளை உருவாக்குவதில் 21 புதிய நிறுவனங்களுக்கு அந்தத் திட்டம் 2019ஆம் ஆண்டிலிருந்து ஆதரவளித்து வருகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்