மொழிபெயர்ப்பு, பட்டிமன்றம்...மாணவர்களை உற்சாகப்படுத்திய விழா
மொழிபெயர்ப்பு, பட்டிமன்றம்...மாணவர்களை உற்சாகப்படுத்திய விழா
மாணவர்களின் சொல்வளத்தைப் பெருக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, மாணவர்களுக்கான சொல், வாக்கிய மொழிபெயர்ப்புப் போட்டிகள்.
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் தொடக்கநிலை மாணவர்களுக்கான போட்டி இன்று (ஆகஸ்ட் 11) நடைபெற்றது.
மூன்று பிரிவுகளாக மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டனர்.
முதல் பிரிவு: தொடக்க நிலை 1,2 - சொற்கள் மொழிபெயர்ப்பு
இரண்டாம் பிரிவு: தொடக்கநிலை 3,4 - வாக்கியங்கள் மொழிபெயர்ப்பு
மூன்றாம் பிரிவு: தொடக்க நிலை 5,6 - வாக்கியங்கள் மொழிபெயர்ப்பு
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சன்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக மாணவர்களுக்கான பட்டிமன்றமும் நடைபெற்றது.