உச்சநேரத்தில் நடை, சைக்கிள், பொதுப் போக்குவரத்துப் பயணம் அதிகரித்துள்ளது
சிங்கப்பூரில், நிலப் போக்குவரத்து ஆணையம் நடத்திய ஆய்வு முடிவுகளின்படி, உச்சநேரத்தில் நடந்து செல்வோர், சைக்கிளில் செல்வோர், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் ஆகியோரின் விகிதம் 2012இலிருந்து 3 விழுக்காடு அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரில், நிலப் போக்குவரத்து ஆணையம் நடத்திய ஆய்வு முடிவுகளின்படி, உச்சநேரத்தில் நடந்து செல்வோர், சைக்கிளில் செல்வோர், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் ஆகியோரின் விகிதம் 2012இலிருந்து 3 விழுக்காடு அதிகரித்துள்ளது.
Walk-Cycle-Ride (WCR) குறித்து நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் அவ்விவரத்தை வெளியிட்டார்.
Walk-Cycle-Ride (WCR) போக்குவரத்து முறையைப் பயன்படுத்துபவர்கள்:
2012: 69%
2019: 72%
2040க்குள்: 90%
2040க்குள் 90 விழுக்காட்டினர் நடை, சைக்கிள், பொதுப் போக்குவரத்து வழி பயணம் செய்வதை உறுதிப்படுத்த போக்குவரத்து அமைச்சின் திட்டங்கள்:
1. பேருந்துகளுக்கு முன்னுரிமை கொடுப்பதன்வழி பயண நேரத்தைக் குறைப்பது
2. ரயில் கட்டமைப்பை விரிவுபடுத்துவது
3. சைக்கிள் ஓட்டுவதற்கான கட்டமைப்பை மேம்படுத்துவது
4. பொதுப் போக்குவரத்துப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்களிடம் அதிகரிப்பது