Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

133 சிகரெட் பெட்டிகளைக் கடத்த முயன்ற இந்தோனேசிய ஆடவர்கள் இருவருக்குச் சிறைத்தண்டனை

இந்தோனேசிய ஆடவர்கள் இருவர் 133 பெட்டிகளில் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கடத்த முயன்றதற்காக அவர்களுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

வாசிப்புநேரம் -
133 சிகரெட் பெட்டிகளைக் கடத்த முயன்ற இந்தோனேசிய ஆடவர்கள் இருவருக்குச் சிறைத்தண்டனை

படம்: குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம்

இந்தோனேசிய ஆடவர்கள் இருவர் 133 பெட்டிகளில் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கடத்த முயன்றதற்காக அவர்களுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

அவை பிரானி முனையத்தில், தெப்பம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

28 வயது பாரிலுக்கு 14 வாரச் சிறைத்தண்டனையும் 26 வயது நௌடினுக்கு 10 வாரச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டதாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.

சிகரெட் பெட்டிகளுக்காக, செலுத்தப்படாமல் ஏமாற்றப்பட்ட தீர்வையின் மொத்த மதிப்பு சுமார் 15,400 வெள்ளி.

செலுத்தப்படாத பொருள்,சேவை வரியின் மதிப்பு சுமார் 1,100 வெள்ளி.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்