பொது இடங்களில் தகாத முறையில் நடந்துகொண்ட 2 ஆடவர்கள் கைது
வெவ்வேறு நிகழ்வுகளில் பொது இடங்களில் தகாத முறையில் நடந்துகொண்ட 2 ஆடவர்கள் நேற்று முன்தினம் (ஜனவரி 21) கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெவ்வேறு நிகழ்வுகளில் பொது இடங்களில் தகாத முறையில் நடந்துகொண்ட 2 ஆடவர்கள் நேற்று முன்தினம் (ஜனவரி 21) கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதல் நிகழ்வு சென்ற திங்கள்கிழமை, யீஷூன் ஸ்டிரிட் 81 அருகே இடம்பெற்றது.
34 வயது ஆடவர், 3 பெண்களுக்கு முன் நிர்வாணமாக இருந்ததாக நம்பப்படுகிறது.
அந்த ஆடவர் அவ்வாறு நடந்துகொண்டது அது முதல்முறையல்ல என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
மற்றொரு நிகழ்வு ஜனவரி 20ஆம் தேதி அப்பர் பூன் கெங் ரோட்டில் உள்ள புளோக் 8இல் இடம்பெற்றது.
27 வயது ஆடவர், ஒரு பெண்ணுக்கு முன்னிலையில் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்பட்டது.
காவல் துறையின் கண்காணிப்புக் கேமரா வாயிலாக அந்த ஆடவர் அடையாளம் காணப்பட்டார்.
அந்த இரண்டு ஆடவர்களும் இன்று (ஜனவரி 23) நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்.
குற்றம் நிரூபணமானால், அவர்களுக்கு 3 மாதம் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.