உரிமம் இல்லாமல் செயல்பட்ட கேளிக்கைக் கூடங்களில் தகுந்த வேலை அனுமதியின்றி பணிபுரிந்த 12 பேர் கைது
சிராங்கூன் அவென்யூ 2-இல் உரிமம் இல்லாமல் நடத்தப்பட்ட கேளிக்கைக் கூடத்தில் உரிய அனுமதியின்றி வேலை செய்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிராங்கூன் அவென்யூ 2-இல் உரிமம் இல்லாமல் நடத்தப்பட்ட கேளிக்கைக் கூடத்தில் உரிய அனுமதியின்றி வேலை செய்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் 27 வயது ஆடவர்; எஞ்சியோர் 22 லிருந்து 39 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள்.
தகுந்த உரிமம் இல்லாமல் கேளிக்கைக் கூடம் நடத்தியதன் தொடர்பில் ஆடவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
பொதுக் கேளிக்கை சட்டத்தின் கீழ், தகுந்த உரிமம் இன்றிக் கேளிக்கைக் கூடம் நடத்துபவருக்கு அதிகபட்சம் 20,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம்.