Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

2050ஆம் ஆண்டுக்குள் முன்னெப்போதும் இல்லாத அளவில் பருவநிலை மாற்றத்தை சிங்கப்பூர் சந்திக்கும்

2050ஆம் ஆண்டுக்குள் முன்னெப்போதும் இல்லாத அளவில் பருவநிலை மாற்றத்தைச் சந்திக்கும் நகரங்களில் சிங்கப்பூரும் கோலாலம்பூரும் அடங்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
2050ஆம் ஆண்டுக்குள் முன்னெப்போதும் இல்லாத அளவில் பருவநிலை மாற்றத்தை சிங்கப்பூர் சந்திக்கும்

படம்: TODAY/Ernest Chua

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

2050ஆம் ஆண்டுக்குள் முன்னெப்போதும் இல்லாத அளவில் பருவநிலை மாற்றத்தைச் சந்திக்கும் நகரங்களில் சிங்கப்பூரும் கோலாலம்பூரும் அடங்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மழையின் போக்கு மாறும், மேலும் கடுமையான வெள்ளமும் வறட்சியும் உருவாகலாம் என்று பருவநிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஸூரிக்கைத் தளமாகக் கொண்ட அறிவியல், தொழில்நுட்பப் பல்கலைக்கழகக் குழு அந்த ஆய்வை மேற்கொண்டது.  உலகில் 520 நகரங்களையும் நகர்ப்புறப் பகுதிகளையும் உள்ளடக்கி ஆய்வு நடத்தப்பட்டது.

ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்டவை அவை. பருவநிலை மாற்றத்தால் விளையக்கூடிய அபாயங்கள் குறித்து அறிந்துகொள்வதால் அதைச் சமாளிக்கும் வழிகளை நகரங்கள் ஆராய ஆய்வு உதவக்கூடும்.

உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒரேயடியாக வறட்சியும் மிதமிஞ்சிய மழையும் ஏற்படும் நிலை உருவாகலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்