சிங்கப்பூரில் அதிகமானோருக்கு கோவிட்-19 Booster Shots - கூடுதல் தடுப்பூசி போடுவது தொடர்பில் ஆய்வு
சிங்கப்பூரின் தடுப்பூசித் திட்டங்கள், பொருளியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான உத்திகள் ஆகியன பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
சிங்கப்பூரின் தடுப்பூசித் திட்டங்கள், பொருளியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான உத்திகள் ஆகியன பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் தவிர வேறு பல அம்சங்களைக் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது என்று சுகாதார மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி கூறினார்.
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, தொற்று பரவும் விதம் ஆகியவை அவற்றுள் அடங்கும்.
சிங்கப்பூரில் கூடுதலானோருக்கு கோவிட்-19 Booster Shots எனும் கூடுதல் தடுப்பூசி போடுவது தொடர்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.