மாணவர்களிடையே தமிழில் எழுதுவதற்கான ஆர்வத்தை தூண்டிய 'வெற்றி விழா'
தமிழில் எழுதுவதற்கான ஆர்வத்தை இளம் வயதிலேயே விதைத்துவிடவேண்டும்.
வாசிப்புநேரம் -
தமிழில் எழுதுவதற்கான ஆர்வத்தை இளம் வயதிலேயே விதைத்துவிடவேண்டும்.
அந்தக் கருத்தை மையமாகக் கொண்டு 'நானும் ஒரு படைப்பாளி' எனும் பயிலரங்கை ஆண்டுதோறும் நடத்திவருகிறது கல்வியமைச்சின் தமிழ்மொழிப் பிரிவு.
இந்த ஆண்டுப் பயிலரங்கின் நிறைவாக அதன் 'வெற்றி விழா' இன்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது.