அடுத்த இரண்டு வாரங்களுக்கு வறட்சியாகவும் வெப்பமாகவும் இருக்கும் - வானிலை ஆய்வகம்
சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வறட்சியாகவும் வெப்பமாகவும் இருக்கும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வறட்சியாகவும் வெப்பமாகவும் இருக்கும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
அடுத்த இரு வாரங்களுக்குத் தென்கிழக்காசியாவின் வடக்குப் பகுதிகளுக்குப் பருவமழை மாறுவதால் இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களைவிட குறைவான மழையை இங்கு எதிர்பார்க்கலாம் என்று ஆய்வகம் தெரிவித்தது.
எனினும் சில நாள்களில் குறுகிய நேரத்திற்குத் தீவின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை காலையிலும் மதிய நேரத்திலும் பெய்யலாம் என்று கூறப்பட்டது.