ஈரச் சந்தையில் குறைந்திருக்கும் வியாபாரம்; மாற்று வழிகளை நாடும் கடைக்காரர்கள் (காணொளி)
சிங்கப்பூரில் கோவிட்-19 கிருமித்தொற்றுப் பரவலால் மக்கள் நடமாட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது. மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் ஈரச் சந்தைகளும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
சிங்கப்பூரில் கோவிட்-19 கிருமித்தொற்றுப் பரவலால் மக்கள் நடமாட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது. மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் ஈரச் சந்தைகளும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
மளிகைப் பொருள்கள், காய்கறிகள், இறைச்சி, மீன் ஆகியவற்றை வாங்க ஈரச் சந்தைகளுக்குச் செல்வதை மக்கள் குறைத்துள்ளனர்.
அதனால் வியாபாரம் சுமார் 50 விழுக்காடு முதல் 75 விழுக்காடு வரை பாதிக்கப்பட்டுள்ளதாக கடைக்காரர்கள் சிலர் 'செய்தி'இடம் தெரிவித்தனர்.
இதனால் வியாபாரத்தைத் தக்ககவைத்துக் கொள்ள பல்வேறு மாற்று வழிகளை நாடுவதாக 'செய்தி'-இடம் பேசிய கடைக்காரர்கள் தெரிவித்தனர்.