Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

$5.4 மில்லியன் மோசடியின் சந்தேகத்தில் மாது கைது

தங்க முதலீடு தொடர்பான பல்வேறு மோசடிகளைச் செய்த சந்தேகத்தின்பேரில் 49 வயது மாது கைது செய்யப்பட்டிருப்பதாய்க் காவல்துறை தெரிவித்தது.

வாசிப்புநேரம் -
$5.4 மில்லியன் மோசடியின் சந்தேகத்தில் மாது கைது

( படம்: AFP )

தங்க முதலீடு தொடர்பான பல்வேறு மோசடிகளைச் செய்த சந்தேகத்தின்பேரில் 49 வயது மாது கைது செய்யப்பட்டிருப்பதாய்க் காவல்துறை தெரிவித்தது.

மாது குறைந்தது 5 மோசடிகளில் ஈடுபட்டதாகவும், அதில் 5.4 மில்லியன் வெள்ளி ஏமாற்றப்பட்டதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.

தங்கத்தைக் குறைந்த விலைக்கு விற்பதாகக் கூறி மக்களை ஏமாற்றியதாகவும், பணத்தை வங்கிக் கணக்கில் முதலில் செலுத்த வைத்துப் பின் மோசடி செய்ததாகவும் மாது மீது குற்றங்கள் சுமத்தப்பட்டன.

மோசடி குறித்து கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் காவல்துறைக்குப் புகார்கள் வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

மோசடிக் குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்