Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உட்லண்ட்ஸ் கட்டுமான விபத்து - 47வயது ஊழியர் மரணம்

சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள கட்டுமானத் தளத்தில் நேர்ந்த விபத்தில், 47வயது ஊழியர் ஒருவர் மாண்டார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள கட்டுமானத் தளத்தில் நேர்ந்த விபத்தில், 47வயது ஊழியர் ஒருவர் மாண்டார்.

நேற்று, கட்டடத்தின் 15-ஆவது மாடியிலிருந்து அவர் கீழே விழுந்து மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அவர் நின்றுகொண்டிருந்த மேடைத் தளம் சரிந்து விழுந்ததன் காரணமாக, அவர் ஒன்பதாவது மாடியில் விழுந்து மாண்டார் என்று மனிதவள அமைச்சு கூறியது.

அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர்.

அதனை அடுத்து, அந்தக் கட்டுமானத் தளத்தில் பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படவேண்டும் என்று மனிதவள அமைச்சு உத்தரவிட்டது.

அந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்