மாணவர்கள் குறுகிய காலத்தில் பட்டம் பெற உதவும் புதிய பயிற்சிவழி கற்றல் திட்டம் - விரைவில் அறிமுகம்
துமாசிக் பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கான புதிய பயிற்சிவழி கற்றல் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
துமாசிக் பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கான புதிய பயிற்சிவழி கற்றல் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
மாணவர்கள் குறுகிய காலத்தில் பட்டம் பெறுவதற்கு அது உதவியாக அமையும்.
Work Learn Carnival நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் ஓங் யீ காங் அது குறித்து அறிவித்தார்.
மாணவர்கள் படித்துக்கொண்டே, வேலை செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குவது திட்டத்தின் இலக்கு.
SkillsFuture வேலை-கல்வி பட்டத் திட்டத்தின் கீழ், மூன்றாவது ஆண்டில் மாணவர்களுக்குப் பயில்நிலைப் பயிற்சிக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
பட்டம் பெற்ற பிறகு பயில்நிலைப் பயிற்சியில் ஈடுபட்ட அதே நிறுவனத்தில் மாணவர்கள் முழு நேர ஊழியர்களாக இணைந்துகொள்ளத் திட்டம் வகை செய்யும்.