Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வேலையிடங்களில் தீவிரமாகும் கட்டுப்பாடுகள்

 வேலையிடங்களில் தீவிரமாகும் கட்டுப்பாடுகள் 

வாசிப்புநேரம் -
வேலையிடங்களில் தீவிரமாகும் கட்டுப்பாடுகள்

(படம்: AFP/Roslan Rahman)

சிங்கப்பூரில் வேலையிடங்களிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படவுள்ளன.

வரும் 8ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை, ஊழியர்களில் 50 விழுக்காட்டினர் மட்டுமே வேலையிடங்களுக்குத் திரும்பலாம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

தற்போது அந்த விகிதம் 75 விழுக்காடாக உள்ளது.

வேலையிடங்களுக்குத் திரும்புவோர் வெவ்வேறு நேரங்களில் வேலையைத் தொடங்குவதை நிறுவனங்கள் தொடர்ந்து உறுதிசெய்ய வேண்டும் என்றும் அமைச்சு கூறியது.

நீக்குப்போக்கான வேலை நேரங்களைச் செயல்படுத்தும்படியும் அது சொன்னது.

வேலையிடங்களில் சமூக ஒன்றுகூடல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று அமைச்சு தெரிவித்தது.

உணவு இடைவேளை போன்ற தவிர்க்க முடியாத சூழல்களில் 5 பேருக்கு மேல் சேர்ந்திருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்