வழிபாட்டுத் தலங்களில் நிகழ்வுக்கு முந்திய COVID-19 பரிசோதனையுடன் 250 பேர் வரை கலந்துகொள்ளலாம்
வழிபாட்டுத் தலங்களில் நிகழ்வுக்கு முந்திய COVID-19 பரிசோதனையுடன் 250 பேர் வரை கலந்துகொள்ளலாம்
PET எனப்படும் நிகழ்வுக்கு முந்திய COVID-19 பரிசோதனையுடன் வழிபாட்டுத் தலங்களில் 250 பேர் வரை பங்கெடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டு நடவடிக்கைகளில் 50க்கும் குறைவானோர் கலந்துகொண்டால், நிகழ்வுக்கு முந்திய COVID-19 பரிசோதனை தேவையில்லை.
ஜூன் 21ஆம் தேதி வரை, வழிபாட்டுத் தலங்களில் பாடல் வழிபாட்டுக்கு அனுமதியில்லை.
பாடல் வழிபாடுகள், முகக்கவசத்தை அகற்றிவிட்டுப் பாடுதல், இசைக்கருவிகள் வாசித்தல் ஆகியவற்றை ஜூன் 21ஆம் தேதியிலிருந்து தொடரலாம்.
சமய நடவடிக்கைகள் குறித்த மேல்விவரங்களைக் கலாசார, சமூக, இளையர் அமைச்சு வெளியிடும்.