புதிய செங்காங் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சி போடியிட திட்டம்
பாட்டாளிக் கட்சி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்காங் குழுத்தொகுதியில் போட்டியிட முடிவெடுத்துள்ளது.
பாட்டாளிக் கட்சி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்காங் குழுத்தொகுதியில் போட்டியிட முடிவெடுத்துள்ளது.
கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் அதனைத் தெரிவித்தார்.
மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்த முக்கிய உத்தேச வேட்பாளர்களை அங்கே எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றபோதும், பாட்டாளிக் கட்சி, செங்காங்கின் சில பகுதிகளில் கணிசமான பணிகளை ஆற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கட்சியின் இறுதி 4 உத்தேச வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து அவர் பேசினார்.
பாட்டாளிக் கட்சி இம்முறை களமிறக்கும் 21 வேட்பாளர்களில் மூன்றில்-ஒரு பங்குக்கும் அதிகமானோர் தேர்தலுக்குப் புதுமுகங்கள்.
2015ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் அக்கட்சி பாதிக்கும் மேல் புதுமுகங்களைக் களமிறக்கியது.