யீஷுனில் நுண்ணிழை விரிவலைக் கட்டமைப்புச் சேவைத் தடை - 600 பேர் பாதிப்பு
யீஷுனில் (Yishun) ஏற்பட்ட நுண்ணிழை விரிவலைக் கட்டமைப்புச் சேவைத் தடையால் சுமார் 600 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
யீஷுனில் (Yishun) ஏற்பட்ட நுண்ணிழை விரிவலைக் கட்டமைப்புச் சேவைத் தடையால் சுமார் 600 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
நேற்று (ஜூன் 14) மாலை 5 மணி அளவில் சேவைத் தடை தொடங்கியதாகச் சேவை வழங்கும் நிறுவனமான NetLink Trust தெரிவித்தது.
இரவு 10:45 மணிக்குச் சேவை வழக்கநிலைக்குத் திரும்பியதாக அது கூறியது.
Singtel, M1, StarHub ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்கள், சேவைத் தடை பற்றி Facebookஇல் தகவல் அளித்தன.