வரவு செலவுத் திட்டம் : நற்பணிப் பேரவை கலந்துரையாடல்
மக்கள் கழக நற்பணிப் பேரவை இந்திய அடித்தளத் தலைவர்களுடன் ஆண்டுக்கொருமுறை நடத்தும் கலந்துரையாடல் இன்று ( வெள்ளிக்கிழமை ) நடைபெற்றது. அண்மையில் வெளியிடப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை ஒட்டி கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
சிங்கப்பூர்: மக்கள் கழக நற்பணிப் பேரவை இந்திய சமூக அடித்தளத் தலைவர்களுடன் ஆண்டுக்கொருமுறை நடத்தும் கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான தர்மன் சண்முகரத்தினம் அண்மையில் வெளியிட்ட வரவு செலவுத் திட்டத்தை ஒட்டி கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
அந்நிகழ்ச்சியில் சுமார் 120 சமூக அடித்தளத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
வரவு செலவு திட்டத்தைப் பற்றி பொதுமக்கள், சமூகத் தலைவர்கள் ஆகியோரின் கருத்துகளைத் திரட்டுவதற்காக மக்கள் கழகமும் சமூக அடித்தள அமைப்புகளும் இதுவரையில் 50க்கும் மேற்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி வந்துள்ளன.