Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

SG50யைக் கொண்டாடும் சமூக மேம்பாட்டு மன்றங்கள்

சிங்கப்பூரின் 50 வருடக் கால சுதந்திரத்தைக் கொண்டாடடும் ஒரு சமூக அணிவகுப்பு - விறுவிறுப்பான நடைப்பயிற்சி நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமையன்று மரீனா பேயில் நடைபெறவுள்ளது. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 50 வருடக் கால சுதந்திரத்தைக் கொண்டாடும் ஒரு சமூக அணிவகுப்பு - விரைவு நடை நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமையன்று மரீனா பேயில் நடைபெறவுள்ளது. 5 வட்டாரங்களைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள், சமூக பங்காளிகள், தொண்டூழியர்கள் என சுமார் 5 ஆயிரம் பேர் அதில் கலந்துக்கொள்வர்.

CDCs Celebrating Communities என்ற 2.5 கிலோமீட்டர் நடை காலை 7.30 மணிக்கு மரீனா பேயில் தொடங்கும். 5 வட்டாரங்களின் மேயர்கள் அவர்களுடைய தொகுதிகளுடன் இணைந்து சிங்கப்பூரின் 50வது பிறந்தநாளைக் கொண்டாடுவது இதுவே முதல் முறை.

பிரதமர் லீ சியென் லூங் நடையை வழிநடத்துவார். சமூக மேம்பாட்டு மன்றங்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளும் பல்வேறு சுகாதார, சுற்றுப்புற விழிப்புணர்வு கண்காட்சிகளும் நடைபெறும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்