நாடாளுமன்றத்தில் திரு லீயின் நல்லுடலைக் காண இன்று இறுதி நாள்
சிங்கப்பூரின் மறைந்த முன்னாள் பிரதமர் திரு லீ குவான் இயூவுக்கு நாடாளுமன்றக் கட்டடத்தில் இறுதி மரியாதை செலுத்த, மக்கள், பாடாங்கில் தொடர்ந்து திரண்டு வருகின்றனர்.
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் மறைந்த முன்னாள் பிரதமர் திரு லீ குவான் இயூவுக்கு நாடாளுமன்றக் கட்டடத்தில் இறுதி மரியாதை செலுத்த, மக்கள், பாடாங்கில் தொடர்ந்து திரண்டு வருகின்றனர்.
வரிசை வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது. வரிசையில் நிற்போர் சுமார் 5 மணிநேரம் காத்திருக்க நேரிடலாம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
திரு லீக்கு நாடாளுமன்றக் கட்டடத்தில் இறுதி மரியாதை செலுத்துவதற்கு இன்றே இறுதி நாள். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த, சிங்கப்பூர் முழுவதிலும் இருக்கும் 18 சமூக அஞ்சலித் தளங்களில் பொதுமக்கள் நாடலாம்.
நாளை திரு லீக்கு அரசு மரியாதையுடன் நடைபெறவிருக்கும் இறுதிச் சடங்கு முடிவடையும் வரை, அனைத்து 18 சமூக அஞ்சலித் தளங்களும் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என்று மக்கள் கழகம் தெரிவித்தது.
முன்பாக, அவற்றில் பத்து தளங்கள் மட்டுமே, 24 மணிநேரமும் திறக்கப்பட்டிருந்தன.