ஆறாம் நாள்: திரு லீக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களின் கருத்து
இனம், மொழி, மதம், வயது, பாலினம், குடியுரிமை என்று எந்தப் பாகுபாடும் பாராமல், திரு லீக்கு, பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த மக்கள் சிங்கப்பூரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இனம், மொழி, மதம், வயது, பாலினம், குடியுரிமை என்று எந்தப் பாகுபாடும் பாராமல், திரு லீக்கு, பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த மக்கள் சிங்கப்பூரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரைப் பற்றி தங்கள் மனங்களில் பதிந்த நினைவுகளைப் பல சிங்கப்பூரர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். மக்களுக்காகவே தமது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்த திரு லீயைப் பற்றி கருத்து கூறுகின்றனர் ராஜேந்திரன், ரமேஷ், ஆறுமுகம் ஹரிதாஸ். அன்பை வெளிப்படுத்த பலர் அவர்கள் கையால் பல பொருள்களை செய்தனர். அதுபோல, திரு லீ மீது அவருக்கிருந்த அளவு கடந்த அன்பை வெளிப்படுத்த ஆறுமுகம் ஹரிதாசுடைய மனைவி வாகனங்களுக்கான ஒட்டுவில்லைகளைத் தயாரித்தார்.