குடும்பத்தினரின் வாழ்க்கையில் வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளார் திரு லீ : பிரதமர்
திரு லீ குவான் இயூ, அவரின் குடும்பத்தினரின் வாழ்க்கையில் வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளதாகப் பிரதமர் லீ சியன் லூங் கூறியிருக்கிறார்.
திரு லீ குவான் இயூ, அவரின் குடும்பத்தினரின் வாழ்க்கையில் வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளதாகப் பிரதமர் லீ சியன் லூங் கூறியிருக்கிறார். Mandai தகனச் சாலையில், திரு லீ குவான் இயூவின் தனிப்பட்ட இறுதிச் சடங்கில் பிரதமர் லீ அவ்வாறு கூறி அஞ்சலி செலுத்தினார். திரு லீயைத் தந்தையாக, தாத்தாவாக, அண்ணனாக, நண்பராக, கடுமையான ஆனால் பரிவு மிக்க முதலாளியாக, குடும்பத் தலைவராக அறிந்ததற்குக் கொடுத்துவைத்திருப்பதாகச் சொன்னார் பிரதமர். காலமான திரு லீ, நீண்ட, முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து, அமைதியாக இயற்கை ஏய்தினார். திரு லீ மறைந்தாலும், அவரின் பண்புகள், அவர் காட்டிய அன்பு, அவரின் வார்த்தைகள் விட்டுப் பிரியா என்றும், அவர்களுக்குள் நீண்ட காலம் இருக்கும் என்றும் பிரதமர் சொன்னார். தனிப்பட்ட இறுதிச் சடங்கில், திரு லீ குவான் இயூவின் குடும்பத்தினர், நண்பர்கள், அவருடன் நெருக்கமாகப் பணியாற்றிவர்கள், பாதுகாப்புக் குழுவினர், மருத்துவகக் குழுவினர் மட்டும் கலந்துகொண்டனர். திரு லீயைக் கவனித்துக்கொண்டதற்குத் தாமும், தமது குடும்பத்தினரும் நன்றிக் கடன்பட்டிருப்பதாகக் கூறி, பிரதமர் லீ நன்றி தெரிவத்துக்கொண்டார்.