திரு லீக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பூட்டான் அரசர்
மறைந்த திரு லீ குவான் இயூவின் அரசபூர்வ இறுதிச் சடங்கில் பூட்டான்(Bhutan) அரசர் ஜிக்மே கேசர் நம்ஜெல் வாங்சுக்கும்(Jigme Khesar Namgyel Wangchuk), அவரது துணைவியாரும் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூர்: மறைந்த திரு லீ குவான் இயூவின் அரசபூர்வ இறுதிச் சடங்கில் பூட்டான்(Bhutan) அரசர் ஜிக்மே கேசர் நம்ஜெல் வாங்சுக்கும்(Jigme Khesar Namgyel Wangchuk), அவரது துணைவியாரும் கலந்துகொண்டனர்.
திரு லீயுடன் நடந்த ஒரு குறிப்பிட்ட சந்திப்பு குறித்து அவர் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
தாம் மிகவும் மதிக்கும் தலைவரான திரு லீயைச் சந்தித்தபோது, அவரது ஆசிகளைக் கோரியதாகவும், அதற்குத் திரு லீ, தாம் ஆசிகள் வழங்குவதில்லை என்று புன்னகைத்துக்கொண்டே சொன்னதாகவும், அரசர் ஜிக்மே குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து, தமக்கு ஏதாவது அறிவுரை கூறும்படி அரசர் கேட்டுக்கொண்டார். அதற்குத் திரு லீ, "உங்கள் பயணத்தை எப்படித் தொடங்குகிறீர்கள் என்பது முக்கியமில்லை; எப்படி முடிக்கிறீர்கள் என்பதே முக்கியம்"என்று அறிவுரை கூறினார்.
எந்தப் பணியை மேற்கொண்டாலும், திரு லீயின் வார்த்தைகளை எப்போதும் மனத்தில் கொள்வதாகச் சொன்னார் அரசர் ஜிக்மே.