நேர்மையாகச் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியவர் திரு லீ: திரு தனபாலன்
திரு லீயுடன் அணுக்கமாகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சரும், மக்கள் செயல்கட்சியில் நீண்ட காலமாக அங்கம் வகிப்பவருமான திரு எஸ் தனபாலனும் அவருக்குப் புகழுரை ஆற்றினார்.
சிங்கப்பூர்: திரு லீயுடன் அணுக்கமாகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சரும், மக்கள் செயல்கட்சியில் நீண்ட காலமாக அங்கம் வகிப்பவருமான திரு எஸ் தனபாலனும் அவருக்குப் புகழுரை ஆற்றினார்.
திரு லீயின் தலைமைத்துவத்துக்கு அஞ்சலி செலுத்திய அதே வேளையில், எப்போதுமே நேர்மையாகச் செயல்படவேண்டும் என்று திரு லீ தொடர்ந்து வலியுறுத்தியதாகச் திரு தனபாலன் சொன்னார்.
கடுமையான முடிவுகளை எடுப்பவர் என்ற தோற்றத்தைத் திரு லீ கொண்டிருந்தாலும், அவர் உண்மையிலேயே மிகுந்த அன்பு கொண்டிருந்தவர் என்றார் திரு தனபாலன்.