மலேசியாவில் திரு லீயின் இறுதிச் சடங்கை நேரடி ஒளிபரப்பு வழியாக கண்டனர் மக்கள்
மறைந்த திரு லீ குவான் இயூவுக்கு, அரசு மரியாதையுடன் நடைபெற்ற இறுதிச் சடங்கை நேரடி ஒளிபரப்பு வழி பார்க்க,மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின், சிங்கப்பூர் உயர் ஆணையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.
மறைந்த திரு லீ குவான் இயூவுக்கு, அரசு மரியாதையுடன் நடைபெற்ற இறுதிச் சடங்கை நேரடி ஒளிபரப்பு வழி பார்க்க,மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின், சிங்கப்பூர் உயர் ஆணையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.
திரு லீயின் இறுதிச் சடங்கின் நேரடி ஒளிபரப்பு, நேற்று நண்பகல் 12 மணிமுதல், மாலை சுமார் 5 மணிவரை, அங்கு காண்பிக்கப்பட்டது.
சிங்கப்பூர்ப் பிரதமர் லீ சியன் லூங், தமது தந்தை, திரு லீ குவான் இயூவுக்கு ஆற்றிய புகழஞ்சலி உரையைக் கேட்டு, அங்கு திரண்டிருந்த பலர் கண்ணீர் சிந்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.