Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வேலை தேடுவதற்கு உதவும் திட்டம்

புக்கிட் பாத்தோக் குடியிருப்பாளர்களில் வேலையில்லாமல் இருப்பவர்கள் வேலை தேடுவதற்கு உதவும் திட்டம் குறித்து மக்கள் செயல் கட்சி வேட்பாளர் திரு. முரளி பிள்ளை விவரித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
வேலை தேடுவதற்கு உதவும் திட்டம்

புக்கிட் பாத்தோக் பேருந்து முனையத்தில் குடியிருப்பாளர்களைச் சந்தித்த திரு முரளி. (படம்: Sara

புக்கிட் பாத்தோக் குடியிருப்பாளர்களில்
வேலையில்லாமல் இருப்பவர்கள் வேலை தேடுவதற்கு உதவும் திட்டம் குறித்து மக்கள் செயல் கட்சி வேட்பாளர் திரு. முரளி பிள்ளை விவரித்துள்ளார்.

புக்கிட் பாத்தோக்கில் இடம்பெற்ற தொகுதிச் சுற்றுலாவின்போது அவர் அவ்வாறு கூறினார்.  

தமது தனிப்பட்ட வர்த்தகத் தொடர்புகள் மூலமும் சமூகத் தொண்டூழியர்கள் மூலமும் புக்கிட் பாத்தோக் குடியிருப்பாளர்களுக்கு வேலை தேடித் தர தமது திட்டம் வகைசெய்யும் என்று திரு. முரளி கூறினார்.

ஜூரோங் குழுத்தொகுதியை ஒரே குடும்பமாய்க் கருதுவதாகக் குறிப்பிட்ட திரு. முரளி, தேவையிருந்தால் அங்குள்ள சமூகத் தொண்டூழியர்களிடமிருந்தும் உதவி நாடலாம் என்று சொன்னார்.

மந்தமான பொருளியல் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்பாளர்களுக்குத் தமது திட்டம் கைகொடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

துணைப் பிரதமர் திரு. தர்மன் சண்முகரத்தினம் தலைமையில் நடைபெற்ற தொகுதிச் சுற்றுலாவில் திரு. முரளியுடன் ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். 

புக்கிட் பாத்தோக் பேருந்து முனையத்தில் ஓட்டுநர்களைச் சந்தித்துப் பேசிய திரு. முரளி, அவர்களிடம் தமது மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார். 

தேர்தல் பிரசாரத்தின் அடுத்த சில நாட்களில் கடுமையான போட்டியை எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். 

புக்கிட் பாத்தோக் குடியிருப்பாளர்களுக்காகத் தாம் வரைந்த திட்டங்கள் மீது அவர்கள் நம்பிக்கை கொள்ள தம்மால் முடிந்ததைச் செய்யப்போவதாகத் திரு. முரளி சொன்னார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்