Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தல்; "பிரச்சினைகளைப் பற்றி ஆரய வேண்டும்"

புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தல் டாக்டர் சீயைப் பற்றியதாகவோ மக்கள் செயல் கட்சியின் முரளியைப் பற்றியதாவோ இருக்கக்கூடாது.

வாசிப்புநேரம் -
புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தல்; "பிரச்சினைகளைப் பற்றி ஆரய வேண்டும்"

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் டாக்டர் பால் தம்பையா

புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தல் டாக்டர் சீயைப் பற்றியதாகவோ மக்கள் செயல் கட்சியின் முரளியைப் பற்றியதாவோ இருக்கக்கூடாது.

அது, பிரச்சினைகளைப் பற்றி இருக்க வேண்டும் என்று சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் டாக்டர் பால் தம்பையா கூறியிருக்கிறார்.

ஞாயிறன்று நடைபெற்ற கட்சியின் தேர்தல் கூட்டத்தில் அவர் பேசினார்.

ஒருவருடைய பேச்சு, செயல்பாடு , கொள்கை ஆகியவற்றைக் குறைகூறலாம் ஆனால், அந்த நபரைத் தாக்கக்கூடாது என்றார் அவர்.

டாக்டர் லீ வேய் லிங் வெளியிட்ட குற்றச்சாட்டுகளை வைத்து பிரதமரின் கருத்துகளில் உள்ள பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்தியிருக்கலாம், ஆனால், அவ்வாறு சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி செய்யாது என டாக்டர் தம்பையா கூறினார்.

அதனால் புக்கிட் பாத்தோக் குடியிருப்பாளர்களுக்கு எந்தப் பயனும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்