பிரசாரத்தின் இறுதி நாளில் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் தகவல்களை வாக்காளர்கள் செவிமடுக்கவேண்டாம்: டாக்டர் சீ
தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் குறைகூறல்களை வாக்காளர்கள் செவிமடுக்க வேண்டாம் என்று சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவான் (Chee Soon Juan) கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் குறைகூறல்களை வாக்காளர்கள் செவிமடுக்க வேண்டாம் என்று சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவான் (Chee Soon Juan) கேட்டுக்கொண்டுள்ளார்.
Fajar கடைத்தொகுதிக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் அவ்வாறு கூறினார்.
"மக்கள் செயல் கட்சியின் தனிப்பட்ட தாக்குதல்களை ஒதுக்கிவிட்டு முக்கிய விவகாரங்களின்மீது மட்டுமே வாக்காளர்கள் கவனம் செலுத்த வேண்டும்" என்றார் டாக்டர் சீ.
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி, மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி, யூஹுவா தனித்தொகுதி, புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி, புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதி ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது.