Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தண்ணீர், மின்சாரம் சேமிக்கப்படும் அளவு குறித்துத் தொகுதிவாசிகளுக்குத் தெரிவிக்க அறிவிப்புப் பலகை அமைக்கப்படும்: டாக்டர் ஏமி கோர்

சுவா சூ காங் குழுத்தொகுதி, ஹோங் கா நார்த் தனித்தொகுதி ஆகியவற்றில் தண்ணீரும் மின்சாரமும் எவ்வளவு சேமிக்கப்படுகிறது என்பதைத் தெரிவிக்கும் அறிவிப்புப் பலகை அமைக்கப்படும் என்று டாக்டர் ஏமி கோர் கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
தண்ணீர், மின்சாரம் சேமிக்கப்படும் அளவு குறித்துத் தொகுதிவாசிகளுக்குத் தெரிவிக்க அறிவிப்புப் பலகை அமைக்கப்படும்: டாக்டர் ஏமி கோர்

(கோப்புப் படம்: Facebook/AmyKhor)

சுவா சூ காங் குழுத்தொகுதி, ஹோங் கா நார்த் தனித்தொகுதி ஆகியவற்றில் தண்ணீரும் மின்சாரமும் எவ்வளவு சேமிக்கப்படுகிறது என்பதைத் தெரிவிக்கும் அறிவிப்புப் பலகை அமைக்கப்படும் என்று டாக்டர் ஏமி கோர் கூறியிருக்கிறார்.

ஹோங் கா நார்த் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் அவர், அந்த வட்டாரங்களுக்கான தமது கட்சியின் முக்கியத் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்.

சுவா சூ காங் குழுத் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் சக வேட்பாளர்களுடன் Facebook நேரலை நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

இரு தொகுதிகளிலும் தற்போதுள்ள உள்கட்டமைப்பைக் கொண்டே, மக்களின் மனப்போக்கை மாற்ற உதவுவதன் மூலம் பசுமை முயற்சிகள் வெற்றிபெறும்

என்றார் டாக்டர் கோர்.

தாங்கள் வெற்றிபெற்றால், இரு வட்டாரங்களையும் தொடர்ந்து ஒரே நகரமன்றம் நிர்வகிக்கும் என்றார் அவர்.

அதனால் செலவைக் குறைத்து, புதிய திட்டங்களை மேலும் எளிதாக நடைமுறைப்படுத்த முடியும் என்பதை டாக்டர் கோர் சுட்டினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்