Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இந்தப் பொதுத்தேர்தல் மிகவும் முக்கியமானது: துணைப் பிரதமர் ஹெங்

இந்த பொதுத்தேர்தல் சிங்கப்பூரர்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம், எதிர்காலம் ஆகியவை பற்றியது என்பதால், மிகவும் முக்கியமானது என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட்கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
இந்தப் பொதுத்தேர்தல் மிகவும் முக்கியமானது: துணைப் பிரதமர் ஹெங்

(கோப்புப் படம்: Hanidah Amin)

இந்த பொதுத்தேர்தல் சிங்கப்பூரர்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம், எதிர்காலம் ஆகியவை பற்றியது என்பதால், மிகவும் முக்கியமானது என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட்கூறியுள்ளார்.

அந்தச் செய்தி மக்களிடம் வலுவாகப் போய்ச் சேர்ந்திருப்பதைக் கண்டு தாம் மகிழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரசாரங்களின் இறுதி நாளான இன்று காலையில் திரு. ஹெங், பிடோக் சவுத் சந்தை, உணவங்காடி நிலையத்திற்குத் தொகுதி உலா சென்றிருந்தார்.

அண்மையில் வெளியிடப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்துக் குடியிருப்பாளர்கள் கருத்துத் தெரிவித்ததாக அவர் கூறினார்.

COVID-19-இன் தாக்கத்தைத் தணிப்பதற்கு, வர்த்தகங்கள், ஊழியர்கள், குடும்பங்கள் ஆகியவற்றுக்கு உதவும் நோக்கில் அந்த வரவுசெலவுத் திட்ட நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்