பொதுத்தேர்தலில் வெற்றி - பிரதமருக்கு வாழ்த்துத் தெரிவித்த இந்தோனேசிய அதிபர்
சிங்கப்பூர் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதற்குப் பிரதமர் லீ சியென் லூங்கிற்கு, இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ (Joko Widodo) வாழ்த்துக் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதற்குப் பிரதமர் லீ சியென் லூங்கிற்கு, இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ (Joko Widodo) வாழ்த்துக் கூறியுள்ளார்.
தொலைபேசியில் பேசிய தலைவர்கள் இருவரும், சிங்கப்பூருக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையிலான உறவை மறுவுறுத்திப்படுத்தினர்.
கிருமிப்பரவல் சூழலில் பொதுவான சவால்களைச் சமாளிக்க, இரு தரப்பிலும், வட்டார அளவிலும் தொடர்ந்து இணைந்து செயல்படும் வழிகளை ஆராய்வதாகவும் அவர்கள் கூறினர்.