தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தலைவராககூடும் என்பதால் அவர்களின் கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தலைவராகும் சாத்தியம் இருப்பதால் அவர்களின் கருத்துகளும் முக்கியத்துவம் பெறுவதாக மரீன் பரேட் குழுத்தொகுதி குழுத்தொகுதி மக்கள் செயல் கட்சி வேட்பாளர் சியா கியன் பெங் (Seah Kian Peng), கூறியுள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தலைவராகும் சாத்தியம் இருப்பதால் அவர்களின் கருத்துகளும் முக்கியத்துவம் பெறுவதாக மரீன் பரேட் குழுத்தொகுதி குழுத்தொகுதி மக்கள் செயல் கட்சி வேட்பாளர் சியா கியன் பெங் (Seah Kian Peng), கூறியுள்ளார்.
பாட்டாளிக் கட்சி வேட்பாளர் ரயிசா கான் (Raeesah Khan) பற்றிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
வேட்பாளர்களின் கருத்துகள் பற்றி பொதுமக்கள் அறிவது அவர்களின் உரிமை என்றார் திரு சியா.
சமூக ஊடகத்தில் பதிவிட்ட கருத்துகளுக்காக குமாரி கானிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
ஒரு தலைவர் என்ன நினைக்கிறார், அவருடைய கருத்து என்ன என்பதை அறிந்து கொள்ள மக்கள் விரும்புவர். எனவே, என்ன சொல்கிறோமோ அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று திரு சியா கூறினார்.