Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குடியிருப்பாளர்களின் நலனுக்கே முன்னுரிமை: மக்கள் செயல் கட்சி வேட்பாளர் முரளி பிள்ளை

குடியிருப்பாளர்களின் நலனே தனது முன்னுரிமை என்று புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி மக்கள் செயல் கட்சி வேட்பாளர் முரளி பிள்ளை தெரிவித்துள்ளார். 

வாசிப்புநேரம் -
குடியிருப்பாளர்களின் நலனுக்கே முன்னுரிமை: மக்கள் செயல் கட்சி வேட்பாளர் முரளி பிள்ளை

படம்: Ruth Smalley

குடியிருப்பாளர்களின் நலனே தனது முன்னுரிமை என்று புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி மக்கள் செயல் கட்சி வேட்பாளர் முரளி பிள்ளை தெரிவித்துள்ளார்.

சொந்த வேலை விருப்பங்கள், குடியிருப்பாளர்களின் நலன் ஆகியவற்றுக்கிடையே ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால், நான் குடியிருப்பாளர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இடைத்தேர்தலின் போதும் அதே கருத்தைத்தான் கூறினேன்.

என்றார் திரு. முரளி

மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்ட Green Ribbon பணிக்குழுத் திட்டம் வைத்துள்ளதாக அவர் கூறினார். வாடகை வீடுகளில் வசிக்கும் பிள்ளைகளுக்கான துணைப்பாடத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்