வாக்குகள் , முன்னோடிக் கணக்கெடுப்புகள்
தேர்தல் இறுதி முடிவுகள் வெளிவருவதற்கு, இதற்கு முன்னர், சிங்கப்பூரர்கள் நள்ளிரவு வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
சிங்கப்பூர்: தேர்தல் இறுதி முடிவுகள் வெளிவருவதற்கு, இதற்கு முன்னர், சிங்கப்பூரர்கள் நள்ளிரவு வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
இன்று, முடிவுகள் குறித்து முன்கூட்டியே கணிப்புகளை வழங்க, முன்னோடிக் கணக்கெடுப்பின் மூலம், வாக்குகள் எண்ணப்படும்.
தேர்தல் துறை, முதல்முறையாகப் பொதுமக்களுக்கு, முன்னோடிக் கணிப்புகளை வெளியிடவிருக்கிறது. இருப்பினும் அவை இறுதி முடிவுகள் அல்ல. இறுதி முடிவுகளைத் தெரிந்துகொள்ள தேர்தல் அதிகாரியின் அறிவிப்புக்குக் காத்திருக்க வேண்டும்.
வதந்திகளையும், அதிகாரபூர்வமற்ற தகவல்களையும் தடுப்பதே முன்னோடிக் கணிப்புகளை வெளியிடுவதன் நோக்கம் என்று தேர்தல் துறை கூறியது.