Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

அல்ஜூனிட் குழுத்தொகுதி - 1.9% வாக்குகள் வித்தியாசம்

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அல்ஜூனிட் குழுத்தொகுதிக்கான முடிவு இறுதியாக அறிவிக்கப்பட்டது. பாட்டாளிக் கட்சியின் வெற்றி இன்று காலை 3 மணிக்குத்தான் உறுதிசெய்யப்பட்டது. 

வாசிப்புநேரம் -
அல்ஜூனிட் குழுத்தொகுதி - 1.9% வாக்குகள் வித்தியாசம்

பாட்டாளிக் கட்சியின் சென் ஷாவ் மாவ், சில்வியா லிம், பைசல் மனாப், பிரீதம் சிங்

சிங்கப்பூர்: நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அல்ஜூனிட் குழுத்தொகுதிக்கான முடிவு இறுதியாக அறிவிக்கப்பட்டது. பாட்டாளிக் கட்சியின் வெற்றி இன்று காலை 3 மணிக்குத்தான் உறுதிசெய்யப்பட்டது.

மக்கள் செயல் கட்சி, வாக்குகள் மீண்டும் எண்ணப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, காலை ஒன்றரை மணிக்கு வாக்குகள் மீண்டும் எண்ணப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மக்கள் செயல் கட்சிக்கும், பாட்டாளிக் கட்சிக்கும் கிடைத்த வாக்குகளின் வித்தியாசம், 2 விழுக்காடு என்பதால், வாக்குகள் மீண்டும் எண்ணப்படவேண்டும் என மக்கள் செயல் கட்சி கேட்டுக்கொண்டது.

போட்டியிட்ட இரு கட்சிகளுக்கிடையிலான  வாக்குகளில் 2 விழுக்காட்டு வித்தியாசம் இருக்கும் பட்சத்தில், வாக்குகளை மீண்டும் எண்ணமாறு 2 விழுக்காட்டு வாக்குகளைக் குறைவாகப் பெற்றுள்ள கட்சி கேட்டுக்கொள்ளலாம்.

இரண்டாம் முறையாக வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு, பாட்டாளிக் கட்சி 1.9 விழுக்காட்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்