அல்ஜூனிட் குழுத்தொகுதி - 1.9% வாக்குகள் வித்தியாசம்
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அல்ஜூனிட் குழுத்தொகுதிக்கான முடிவு இறுதியாக அறிவிக்கப்பட்டது. பாட்டாளிக் கட்சியின் வெற்றி இன்று காலை 3 மணிக்குத்தான் உறுதிசெய்யப்பட்டது.
சிங்கப்பூர்: நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அல்ஜூனிட் குழுத்தொகுதிக்கான முடிவு இறுதியாக அறிவிக்கப்பட்டது. பாட்டாளிக் கட்சியின் வெற்றி இன்று காலை 3 மணிக்குத்தான் உறுதிசெய்யப்பட்டது.
மக்கள் செயல் கட்சி, வாக்குகள் மீண்டும் எண்ணப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, காலை ஒன்றரை மணிக்கு வாக்குகள் மீண்டும் எண்ணப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மக்கள் செயல் கட்சிக்கும், பாட்டாளிக் கட்சிக்கும் கிடைத்த வாக்குகளின் வித்தியாசம், 2 விழுக்காடு என்பதால், வாக்குகள் மீண்டும் எண்ணப்படவேண்டும் என மக்கள் செயல் கட்சி கேட்டுக்கொண்டது.
போட்டியிட்ட இரு கட்சிகளுக்கிடையிலான வாக்குகளில் 2 விழுக்காட்டு வித்தியாசம் இருக்கும் பட்சத்தில், வாக்குகளை மீண்டும் எண்ணமாறு 2 விழுக்காட்டு வாக்குகளைக் குறைவாகப் பெற்றுள்ள கட்சி கேட்டுக்கொள்ளலாம்.
இரண்டாம் முறையாக வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு, பாட்டாளிக் கட்சி 1.9 விழுக்காட்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.