நன்றி செலுத்தச் சென்ற ம.செ.க குழுவினர்
மக்கள் செயல் கட்சிக் குழுவினர், இன்று ஹாலந்து-புக்கிட் தீமா தொகுதியில் அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தலைமையில் வாக்காளர்களுக்கு நன்றி செலுத்தச் சென்றனர். குழுத்தொகுதியின் வெவ்வேறு தனியார் குடியிருப்புப் பேட்டைகளில் அவர்கள் வலம் வந்தனர்.
சிங்கப்பூர்: மக்கள் செயல் கட்சிக் குழுவினர், இன்று ஹாலந்து-புக்கிட் தீமா தொகுதியில் அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தலைமையில் வாக்காளர்களுக்கு நன்றி செலுத்தச் சென்றனர். குழுத்தொகுதியின் வெவ்வேறு தனியார் குடியிருப்புப் பேட்டைகளில் அவர்கள் வலம் வந்தனர்.
நடந்தே சென்று குடியிருப்பாளர்களைச் சந்தித்துப் பேசினர். குடியிருப்புப் பேட்டைகள் அதிகம் என்பதால் அவர்கள் நீண்ட நேரத்தைச் செலவிட்டனர்.
குடியிருப்பாளர்கள் தங்களுக்கு அளித்த வரவேற்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இது இருதரப்பினர் இடையே உள்ள வலுவான உறவைக் காட்டுவதாகவும் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் கூறினார்.
இந்தத் தொகுதியில் தமது குழுவின் கடின உழைப்பால் அது சாத்தியமானதாக அவர் குறிப்பிட்டார். குடியிருப்பாளர்களுடன் செலவிட்ட நேரம் சிறப்பானதாக இருந்ததாகவும் அவர் சொன்னார்.