Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தஞ்சோங் பகாரில் ம.செ.கவின் பணி "தொடர் பயணம்"

தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள் அத்தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று அங்குச் சென்றிருந்தனர். அண்மைத் தேர்தலில் சுமார் 78 விழுக்காட்டு வாக்குகளுடன் அங்கு மக்கள் செயல் கட்சி அமோக வெற்றியடைந்தது.  

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள் அத்தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று அங்குச் சென்றிருந்தனர். அண்மைத் தேர்தலில் சுமார் 78 விழுக்காட்டு வாக்குகளுடன் அங்கு மக்கள் செயல் கட்சி அமோக வெற்றியடைந்தது.  

மக்கள் செயல் கட்சியின் வலுவான பிடியில் இருப்பதாகக் கருதப்படும் வட்டாரங்களில் ஒன்று தஞ்சோங் பகார். 1991இலிருந்து அண்மைப் பொதுத் தேர்தல் வரை அங்கு போட்டியிருந்ததில்லை. இம்முறை மக்கள் செயல் கட்சிக்கு எதிராக சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமைக் கட்சி களமிறங்கியது. 

ஐவர் கொண்ட தம் அணி அதிக வித்தியாசத்தில் வென்றிருந்தாலும், தஞ்சோங் பகாரில் தங்கள் பணி ஒரு தொடர் பயணம் என்றார் பிரதமர் அலுவலக அமைச்சர் திரு. சான் சுன் சிங். தஞ்சோங் பகார் வட்டாரவாசிகளுடன் நல்ல உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகச் சொன்னார் திரு.சான்.

இதுவரை தாங்கள் ஆற்றியுள்ள பணியை அங்கீகரிக்கும் வகையில் மக்கள் ஆதரவளித்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறினார். செய்ய வேண்டிய பணிகள் இன்னும் அதிகமிருப்பதாகக் கூறிய திரு. சான், தஞ்சோங் பகார் மக்களுடன் நெருக்கமாக பணியாற்றி அவர்களுடன் உள்ள பிணைப்பை வலுப்படுத்தப் போவதாகச் சொன்னார்.

இன்னும் சிறந்த தஞ்சோங் பகாரை உருவாக்குவதே தமது குழுவின் இலக்கு என்றார் திரு. சான். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்