Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

உருமாறவிருக்கும் உள்துறை அமைச்சு

உள்துறை அமைச்சு, தான் செயல்படும் விதத்தை உருமாற்றிக்கொள்ளவிருக்கிறது. அதன் சேவைகளுக்கான தேவைகள் அதிகரித்துவரும் வேளையில், அவற்றைக் கையாளும் வகையில் அது தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: உள்துறை அமைச்சு, தான் செயல்படும் விதத்தை உருமாற்றிக்கொள்ளவிருக்கிறது. அதன் சேவைகளுக்கான தேவைகள் அதிகரித்துவரும் வேளையில், அவற்றைக் கையாளும் வகையில் அது தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும். நாடாளுமன்றத்தில் பேசியபோது உள்துறை அமைச்சர் கா. சண்முகம் அவ்வாறு கூறினார்.

எங்கு நெருக்கடிநிலை ஏற்படலாம் என்பதை ஊகித்து, அந்த இடங்களுக்கு விவேகமான முறையில் வளங்களை அனுப்புவதற்குத் தகவல் பகுப்பாய்வு பயன்படுத்தப்படும். அதற்குத் தொழில்நுட்பம் கைகொடுக்கும் என்றார் அமைச்சர்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் குடியிருப்புப் பேட்டைகளின் பொது இடங்களில், போலீஸ் கேமராக்கள் பொருத்தப்படும். பயங்கரவாதத்திற்கும் குற்றச்செயல்களுக்கும் எதிரான உத்திகளை வகுப்பதில் அந்தக் கேமராக்கள் முக்கியப் பங்கு வகிக்கும் என்று திரு. சண்முகம் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்