Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

கல்வித் துறையில் மீண்டும் வேலைக்குச் சேர்ந்த முன்னாள் ஆசிரியர்கள்

சென்ற ஆண்டு முன்னாள் ஆசிரியர்கள் 49 பேர், மீண்டும் கல்வித் துறையில் வேலைக்குச் சேர்ந்ததாக டாக்டர் ஜனில் புதுச்சேரி தெரிவித்தார்.

வாசிப்புநேரம் -

சென்ற ஆண்டு முன்னாள் ஆசிரியர்கள் 49 பேர், மீண்டும் கல்வித் துறையில் வேலைக்குச் சேர்ந்ததாக டாக்டர் ஜனில் புதுச்சேரி தெரிவித்தார்.

ஆசிரியப் பணி தவிர்த்த வெளி அனுபவத்தோடு அவர்கள் பணிக்குத் திரும்பினர்.

முன்னாள் ஆசிரியர்களின் மறு-நியமனம், பதவி விலகிச் செல்லும் ஆசிரியர்களின் இடத்தை நிரப்புவதற்கே என்றார் அவர். 

கல்வித்துறைக்கு அவர்கள் மீண்டும் திரும்பும் வேளையில், அவர்களின் அனுபவத்தை மதித்து, அங்கீகரிப்பதில் கல்வியமைச்சு கவனம்செலுத்தும்.

எடுத்துக்காட்டாக, ஆசிரியர் பணியில் இருந்து வெளியேறிய பின்னர், அவர்கள் வேறு தொழில் அனுபவங்களைப் பெற்றிருக்கலாம். 

எனவே, அவற்றையும் மனத்தில் கொண்டு புதிய சம்பளங்கள் வரையப்படும் என்றார், டாக்டர் ஜனில் புதுச்சேரி.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்