விளையாட்டளர்கள் உணவில் நச்சு - அதிகாரிகள் விசாரணை
தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்கும் வீரர்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவில் நச்சுத் தன்மை இருந்திருக்கலாம் என்று வெளியாகியுள்ள அறிக்கையை ஏற்பாட்டாளர்கள் ஆராய்ந்துவருகின்றனர்.
சிங்கப்பூர்: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்கும் வீரர்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவில் நச்சுத் தன்மை இருந்திருக்கலாம் என்று வெளியாகியுள்ள அறிக்கையை ஏற்பாட்டாளர்கள் ஆராய்ந்துவருகின்றனர். அதனால் சில விளையாட்டாளர்களுக்கு இன்று காலை வயிற்றுப் போக்கு ஏற்பட்டதாக அறிக்கை சொன்னது. அதன் தொடர்பில் சம்பந்தப்பட்டோரிடம் விசாரணை நடத்திவருவதாகவும், சுகாதார நடைமுறைகளை மறுஉறுதி செய்துவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சைக்கிளோட்டத்தில் கலந்துகொண்ட வீரர்களில் சிலர் இன்று காலை எழுந்தபோது, உடல்நலம் சீராக இல்லாததை உணர்ந்ததாகக் கூறினர். தாங்கள் நேற்று இரவு உட்கொண்ட உணவே அதற்குக் காரணம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.