வாருங்கள் கொண்டாடுவோம் !
சிங்கப்பூர் அதன் பொன் விழாவை இன்று கோலாகலமாகக் கொண்டாடுகிறது. அந்த கொண்டாட்டத்துக்கு சிகரம் வைத்தாற்போல அமையும், இன்று மாலை நடைபெறவிருக்கும் தேசிய தின அணிவகுப்பு. இதுவரை கண்டிராத மாபெரும் அணிவகுப்பாக அது அமையும். அனைவருக்கும் "மீடியாகார்ப் செய்தி" இணையவாசலின் பொன்விழா பிறந்தநாள் வாழ்த்துகள்.
சிங்கப்பூர் அதன் பொன் விழாவை இன்று கோலாகலமாகக் கொண்டாடுகிறது. அந்த கொண்டாட்டத்துக்கு சிகரம் வைத்தாற்போல அமையும், இன்று மாலை நடைபெறவிருக்கும் தேசிய தின அணிவகுப்பு.
இதுவரை கண்டிராத மாபெரும் அணிவகுப்பாக அது அமையும். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் அது அரங்கேறும். பிரதானச் சடங்குகள், 1966ல் முதல் முறையாக தேசிய தின அணிவகுப்பு நடந்த பாடாங்கிலும், இரண்டாது அணிவகுப்பு மரீனா பேயின், மிதக்கும் மேடையிலும் நடைபெறும்.
பொதுமக்கள் பல சிறப்பு அம்சங்களை எதிர்பார்க்கலாம். 20 போர் விமானங்கள் சேர்ந்து வானத்தில் 50 என்ற வடிவத்தை உருவாக்கி நம் பொன் விழாவைக் குறிக்கும். சிங்கப்பூர் இதுவரை கண்டிராத வகையில் இன்றைய வாணவேடிக்கை அனைவரையும் மலைக்க வைக்கும்.
கொண்டாட்டங்களைக் காண மரீனா பே வட்டாரத்தில் திரளும் பல்லாயிரக்கணக்கானோருக்கும் கொண்டாட்ட உணர்வு கொண்டுச் செல்லப்படும். பாடாங்கில் நடைபெறும் அணிவகுப்பை மரீனா பே வட்டாரத்தில் வைக்கப்பட்டிருக்கும் ராட்சத மின்னியல் திரைகளில் அங்கு கூடியிருப்போர் நேரடியாகக் காணலாம்.
மிதவைகள் போன்ற அணிவகுப்பின் சில சிறப்பு அம்சங்கள், மரீனா பே வட்டாரத்திற்கும் சென்று அங்கு திரண்டிருப்போரை மகிழ்விக்கும்.
அனைவருக்கும் "மீடியாகார்ப் செய்தி" இணையவாசலின் பொன்விழா பிறந்தநாள் வாழ்த்துகள்.